விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு சட்டம்! மகிழ்ச்சி தரும் சிறப்பு செய்தி

0
213

விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு சட்டம்! மகிழ்ச்சி தரும் சிறப்பு செய்தி

விவசாய நாடு என்றபோதிலும் நம் நாடு முழுவதும், போதிய வருமானம், விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

விவசாயத்தை நம்பி வாங்கிய கடனை திரும்பும் கட்ட அளவுக்கு வருமானம் ஈட்ட முடியாததால் பல விவசாய குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர் என்னதான் பல திட்டங்கள் விவசாயத்திற்காக இருந்தாலும் விவசாயின் நிலைமை மாறாமல் தான் இன்றளவும் இருந்து வருகிறது இதற்காக மத்திய அரசும் பல மாநிலங்களும் விவசாயத்திற்காக நலத்திட்டங்களை செயல்பட்டுக் கொண்டிருக்கும்

விவசாயத்தை நம்பி வாங்கிய கடனும் வருமானம் இல்லாததால், கட்டத் தவறி குடும்பமே சிக்கலில் தவிக்கிறது.
இதனால் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பல மாநில அரசுகளும் முயன்று வருகின்றன. இதனிடையே தமிழக அரசு நாட்டிலே முதன்முறையாக தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் என்ற பெயரில் புதிய சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டத்தின் விதிமுறைகள்

கொள்முதல் செய்வோர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை நிர்ணயம் செய்ய முடியும்.

ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே உற்பத்தி பொருட்களை பரிமாற்றம் செய்ய சட்டப் பாதுகாப்பு.

அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தடுப்பதற்கான சட்டம்.

வேளாண் பொருள் கொள்முதல் செய்வோர், வணிக வரித்துறையால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Previous articleஇடைத்தேர்தல் தோல்வியால் கலங்கி நிற்கும் மு.க.ஸ்டாலின்! விழிப்பிதுங்கி நிற்கும் உடன்பிறப்புகள்
Next article2028 இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல மத்திய அரசின் புதிய முயற்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here