தமிழகத்தில் கொரோனாவால் இத்தனை திருமணங்கள் நின்று போயுள்ளதா?

0
76

இன்றைய காலகட்டத்தில் ஒரு பெற்றோரிடம் எது கடினமான விஷயம் என்று கேட்டால், அவர்கள் உடனடியாக தங்கள் பிள்ளைக்கு சரியான வரம் அமைந்து திருமணம் செய்து வைப்பது தான் என கூறுவார்கள்.

இன்று திருமணம் செய்வதென்பது அவ்வளவு பெரிய வழிமுறையாக உள்ளது. அப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் சில சில காரணங்களுக்காக நின்று போயிருப்பதை கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவாமல் இருக்க அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் நின்று போன திருமணங்களின் எண்ணிக்கையை கேட்டால் அவ்வளவு மலைப்பாக உள்ளது.

கடந்த மார்ச் இறுதி வாரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொது மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், வர்த்தக வளாகங்கள், திரையரங்குகள், கடற்கரை என அனைத்தையும் உடனடியாக மூட அரசு உத்தரவிட்டது.

ஏற்கனவே தேதி குறிக்கப்பட்ட திருமணங்கள் நடைபெறலாம் எனவும் அதில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என அரசு அறிவித்தது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை திருமணம் நடத்த முன் பதிவு செய்ய வேண்டாம் என திருமண கூடங்களுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் மட்டும் கொரோனா ஊரடங்கால் 1.50 லட்சம் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் திருமண அழைப்பிதழ் அடிக்கும் அச்சக தொழில் தொடங்கி, காய்கறி, மளிகை விற்பனை, சமையல் கலைஞர்கள், பூ விற்பவர், வாத்திய கலைஞர்கள் வர பலரும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். நகைக்கடைகளும் மூடி உள்ளதால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணம் நிற்பது ஒருபுறம் இருந்தாலும், ஏற்கனவே நிச்சயித்து திருமண மண்டபங்களில் முன் பணம் தந்தவர்கள், கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் தவிப்பில் உள்ளனர். அரசு இதில் தலையிட்டு கொரோனா ஊரடங்கால் நடைபெறாத திருமணத்திற்கு முன் பணமாக அளிக்கப்பட்ட தொகையை திருப்பி தர திருமண கூடங்களுக்க்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

author avatar
Parthipan K