தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்கியது!

0
203
#image_title

தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்கியது!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் தொடங்கியது.  காலை 9.30 முதல் 12.30 வரை தமிழ் மொழி தகுதி தாள் தேர்வு, அதன்பிறகு மதியம் 2 முதல் 5 மணி வரை பொது தேர்வு நடைபெறவுள்ளது.1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 32 தேர்வு மையங்களில் 8,315 பேர் தேர்வு எழுத உள்ளனர். 5,446 பணியிடங்களுக்கு 27,306 ஆண்கள், 27,764 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9.30 முதல் 12.30 வரை தமிழ் மொழி தகுதி தாள் தேர்வும் மதியம் 2 முதல் 5 மணி வரை பொது தேர்வு நடைபெறுகிறது.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என மூன்று நிலைகளில் தெரிவு முறை நடைபெறுகிறது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழக அரசு தேர்வாணையம் மூலம் அரசு பணிகளுக்கு போட்டி தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

10 லட்சம் பேர் முதல் நிலைத் தேர்வை எழுதினர். அவர்களில் இருந்து மதிப்பெண் அடிப்படையில் 58 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு முதன்மை தேர்வை எழுதுகிறார்கள்.

 

author avatar
Parthipan K