பாமக-வின் முழு பவர் யாருக்கு.. மாம்பழம் சின்னத்தால் வரும் ட்விஸ்ட்!! தேர்தல் ஆணையம் சொல்வது என்ன??

Photo of author

By Rupa

பாமக-வின் முழு பவர் யாருக்கு.. மாம்பழம் சின்னத்தால் வரும் ட்விஸ்ட்!! தேர்தல் ஆணையம் சொல்வது என்ன??

Rupa

To whom is the full power of PMK .. The twist that comes from the mango symbol!! What does the Election Commission say??

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மற்றும் மகனுக்கிடையே தலைமை பதவி குறித்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இவர்களின் செயல்பாடுகளானது கட்சி இரண்டாக பிரிய போவதை தெள்ளந்த் தெளிவாக காட்டுகிறது. அதிலும் மீண்டும் தலைவராக நான் தான் இருப்பேன் என்று ராமதாஸ் முழக்கம் விட்டாலும் அதனை அன்புமணி ஏற்பதாக இல்லை. மேற்கொண்டு ராமதாஸ் அன்புமணிக்கு ஆதரவாக நிற்கும் அனைத்து நிர்வாகிகளின் பதவியையும் பரித்துள்ளார். மாறாக புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார்.

இப்படி இருக்கையில் அன்புமணி அப்பாவின் அறிவிப்புக்கு எதிராக அவர் நியமிக்கும் நிர்வாகிகளை நீக்குகிறார். இப்படி இருவரும் கட்சிக்குள் நிர்வாகிகளை நியமிப்பது நீக்குவதும் உண்டான வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனால் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் குழப்ப நிலையில் உள்ளனர். இதன் அடுத்தக்கட்டமாக கட்சி இரண்டாக பிரிந்தால் மாம்பழம் சின்னம் யாருக்கு செல்லும் என்பது குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.

பாமகவின் சின்ன அதிகாரம் பெறுவதற்கு பொதுச் செயலாளர் மற்றும் தலைவர் கையெழுத்து போட்டு தான் பெற முடியும். அதிலும் ட்விஸ்ட் என்னவென்றால் விக்கிரவாண்டி தேர்தலில் மாநில கட்சியின் அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. அதாவது எட்டு சதவீத வாக்கு விகிதத்தை பெற முடியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னத்தை பாமகவிற்கு ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது. இது ரீதியாக பாமக தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் எழுதியுள்ளது. இருப்பினும் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படும் அதிகாரமானது தற்பொழுது தேர்தல் ஆணையத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.