மக்களே இன்சூரன்ஸ் விஷயத்தில் தலையே போனாலும் இதை மட்டும் செய்யாதீங்க!

0
242

பொதுமக்களில் பலரும் ஓடிஓடி உழைத்தாலும் அந்த பணத்தை எப்படி சேமிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் விவரமறிந்தவர்கள் தாங்கள் ஒரு ரூபாய் சம்பாதித்தாலும் கூட அதனை மிகவும் சுலபமாக ஸ்மார்ட்டான முறையில் பெருக்கிக் கொள்வதற்கான வழி முறையை தேடிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் பலர் நிதி திட்டத்திலும், வங்கி காப்பீட்டுத் திட்டத்திலும், தங்களுடைய பணத்தை பாதுகாப்பாக வைத்து விடுகிறார்கள்.

அந்த வகையில், எந்த ஒரு நிதிதிட்டத்திற்கும் முதல் நடவடிக்கை போதுமான காப்பீட்டு தொகையை முடிவு செய்வதாகும். ஏனென்றால் காப்பீடு இல்லாத சமயத்தில் உண்டாகும் செலவுகள் யூகிக்க முடியாதவையாக இருக்கும்.

அதேநேரம் காப்பீட்டுத் தொகையை எடுக்க செலுத்தப்படும் பிரிமியம் கணிக்கக்கூடியதாக இருக்கும் என்பதால் அதனை சரியாக செலுத்துவதற்கு முன்கூட்டியே சரியான திட்டமிடல் வேண்டும்.

ஆகவே ஒரு ஆபத்தில் இருந்து பாதுகாக்க மட்டுமல்லாமல் உங்களுடைய முதலீடுகளை பாதுகாப்பதற்கும் காப்பீடு முக்கியமானது .

ஆனாலும் சரியான பாதுகாப்பிற்காக இன்சூரன்ஸ் எடுக்கும் போது நீங்கள் செய்யும் சில தவறுகள் உங்களுடைய நிதி நிலைமை மோசமான நிலைக்குக் கொண்டு சென்று விடும் அது என்னவென்று இப்போது பார்க்கலாம்.

உங்களைச் சார்ந்த குடும்பத்தினருக்காக நீங்கள் ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் உங்களுடைய குடும்பத்தில் நீங்கள் மட்டும் சம்பாதிக்கும் நபரென்றால் நீங்கள் இல்லாத சமயத்தில் மற்ற செலவினங்கள், குடும்ப தேவைகளை சமாளிப்பது மிகப் பெரிய சிரமமாக அமைந்துவிடும்.

ஆகவே குடும்பத்திற்காக சம்பாதிக்கும் நபரின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்குப் பிறகு நிதி சார்ந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொள்வதை உறுதி செய்ய போதுமான தொகைக்கு ஆயுள் காப்பீடு செய்திருப்பது மிகவும் அவசியம்.

காப்பீட்டின் முதன்மை நோக்கமே காப்பீடு செய்யக்கூடிய நிகழ்வு அல்லது பொருட்களுக்காக ஏற்படும் இழப்பிற்கு பதிலாக அதற்கான பாதுகாப்பை வழங்குவதாகும்.

யாராக இருந்தாலும், எண்டோமெண்ட் ஆயுள் காப்பீடு கொள்கைகள் காப்பீட்டு காலத்தின்போது பாலிசிதாரரின் அகாலமரணம் உண்டானால் நாமினிக்கு உறுதியளிக்கப்பட்ட தொகையை செலுத்துவதற்கான முதன்மை நோக்கத்துடன் முதிர்ச்சியின் மீதான வருவாயை வழங்கி வருகிறது.

டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளை விட எண்டோன்மெண்ட் பாலிசிகளில் பெறும் தொகை அதிகம். ரிட்டன் வருமான விகிதம் அநேக நேரங்களில் முதலீட்டு தயாரிப்புகளை விட குறைவாக இருக்கிறது.

முதலீட்டு பணத்தை பெறுவதற்கு முதிர்விற்கு முன்னர் உங்களுடைய பாலிசியை ஒப்படைக்க விரும்பினால் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம்.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை வருமான உயர்வு மாறுபடும் சூழ்நிலையின் காரணமாக, உங்களுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தின் தொகையை அதிகரிக்க திட்டமிடலாம்.

ஆகவே உங்கள் காப்பீட்டு தொகையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து தேவைப்படும்போது தொகையையும் மேம்படுத்துவது மிகவும் அவசியம்.

குடும்பத்திலுள்ள அனைத்து நபர்களுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இருப்பது மிகவும் அவசியம். குறிப்பிட்ட நபரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு பாலிசி எடுக்காமல் விட்டுவிட்டு அதன் பிறகு நோயால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை செலவு பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆகவே உடல்நலக் காப்பீட்டின் முக்கியத்துவத்தை நீங்கள் மருந்து விரைவில் காப்பீடு பெறுவது நல்லது. சிகிச்சையின் விலை அதிகரிப்புடன் நீங்கள் காப்பீட்டு தொகையையும் அதிகரிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர் கூட என்றாவது ஒருநாள் எதிர்பாராத விதமாக காயம், ஊனம், அல்லது உயிரிழப்புக்கு ஆளாகலாம், விபத்தை சந்திக்கலாம்.

ஆகவே விபத்து காரணமாக, உண்டாகும் நிதி இழப்புகளுக்கு எதிராக சுய பாதுகாப்பு மற்றும் நிதி சார்ந்து இருப்பவர்களின் பாதுகாப்பிற்காக விபத்து காப்பீடுகளை எடுப்பது மிகவும் அவசியமாகிறது.

மூன்றாம் நபர் காப்பீடு என்பது வாகனம் விபத்துக்குள்ளாகும் போது நம்முடைய காரணத்தால் மூன்றாம் நபருக்கு உண்டாகும். இழப்பை ஈடு செய்வதற்கான காப்பிடாகும்.

சில நேரங்களில் நம்முடைய வாகனத்தால் விபத்தை சந்திக்கும் நபருக்கு சில ஆயிரங்களில் தொடங்கி கோடிக்கணக்கில் கூட இழப்பீடு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

ஆகவே எந்த ஒரு நபருக்கும் தீங்கு விளைவிக்கும் வாகனம் மற்றும் இயந்திரங்கள் உங்களிடமிருந்தால் குறைந்தபட்சம் மூன்றாம் தரப்பு காப்பீட்டையாவது எடுப்பது நல்லது

Previous articleகெயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! உடனே விண்ணப்பியுங்கள்!
Next articleஇந்த நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் மத்திய அமைச்சர் பாராட்டு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here