சுனாமி 15ஆம் ஆண்டு நினைவு தினம்!

0
194

2004 கிறிஸ்துமஸ் கொண்டாடி விட்டு உறங்க சென்ற நிறைய பேருக்கு தெரியாது அந்த கிறிஸ்துமஸ் தான் தமக்கு கடைசி கிறிஸ்துமஸ் என்று ஆம் இந்தியாவே ஆட்டி போட்ட ஆழி பேரலை அது வரை இந்தியர்களுக்கு சுனாமி என்றால் என்ன வென்றே தெரியாது.

2004 டிசம்பர் காலை 6.30 மணிக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் 9.2 ரிக்டர் நில நடுக்கம் ஏற்பட்டு அது சுனாமி பேரலையாக மாரி இந்தியாவை தாக்கியது 8 மணிக்கு இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மார், தான்சேனியா, கென்யா போன்ற நாடுகளில் சுனாமி ஏற்பட்டது இதில் சுமார் 2, 30, 000 பேர் வரை உயிர் இழந்தனர்.

சுனாமி 15ஆம் ஆண்டு நினைவு தினம்!

இந்தியாவை பொறுத்தவரை அந்தமான், சென்னை,கடலூர், பாண்டிச்சேரி, நாகப்பட்டினம் அதில் அதிகமாக பாதிக்க பட்டது நாகப்பட்டினம் மாவட்டம் தான். இந்த சுனாமி பாதிப்பில் இந்தியாவில் மட்டும் சுமார் 10000பேரும், இந்தோனோஷியாவில் 94000பேரும், இலங்கையில் 30196பேரும், தாய்லாந்தில் 5187பேரும் கோரத்தாண்டவத்திற்கு பலியாகினர். பலர் உடமைகளையும் இழந்தனர்.

இன்று சுனாமி தாக்கி 15 ஆம் ஆண்டு நினைவு ஆகும். சுனாமியால் தம் உறவினர்களை இழந்த சொந்தங்கள் கடற்கரையில் பால் ஊற்றி தங்களது உறவினர்களை நினைவுபடுத்தி கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. என்ன தான் மனிதன் விஞ்ஞான வளர்ச்சி அடைந்திருந்தாலும் இது மாதிரி அழிவுகள் மூலம் இயற்கை தன் இருப்பைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

Previous articleஸ்டாலினுக்கு செக் வைக்க தயாரான சோனியா! சிதம்பரத்தை வைத்து ஆடப்போகும் காங்கிரஸ்
Next articleரூ.8 ஆயிரம் விலையில் நோக்கியா அறிமுகம் செய்துள்ள 2.3 ஆண்ட்ராய்டு போன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here