நடிகை துஷாரா விஜயனின் திடீர் முடிவு! சினிமாவிலிருந்து விலகுகிறாரா?

0
184
Tushara Vijayan
Tushara Vijayan

நடிகை துஷாரா விஜயனின் திடீர் முடிவு! சினிமாவிலிருந்து விலகுகிறாரா?

நடிகை துஷாரா விஜயன் அவர்கள் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் திண்டுக்கல்லில் தான் பிறந்து வளர்ந்தார். இவர் போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தின் மூலம் 2019ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படம் இவருக்கு சரியாக அமையவில்லை.

அதன் பின் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் ஆர்யா அவர்களுடன் இணைந்து நடித்தார். இப்படம் 70களில் நடக்கும் குத்து சண்டையை மையப்படுத்தி எடுத்த படமாகும். இது ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இதில் துஷாராவின் நடிப்பு ரசிக்கும் படி இருந்தது. இதற்கு அவர் சில விருதுகளையும் பெற்றார். அதன் பின் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில் நட்சத்திரம் நகர்கிறதே என்ற திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

தற்போது துஷாரா அவர்கள் ரஜினியின் வேட்டையன் படத்திலும் மற்றும் தனுஷின் 50 வது படமான ராயன் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது தற்பொழுது எனக்கு 26 வயது ஆவதாகவும் தன்னுடைய 35 வயது வரை தான் நடிப்பேனென்றும் அதன் பின் நான் நடிக்க மாட்டேனென்றும் அதிர்ச்சியை கிளப்பினார்.

அதற்கு அவர் கூறிய காரணம் தான் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆசையென்றும், தான் ஒரு இயற்கை விரும்பியென்றும் தனக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார். அதனால் தான் 35 வயதுக்கு மேல் தனக்கு நடிக்க விருப்பம் இல்லை எனவும் கூறினார்.