இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

Photo of author

By Parthipan K

இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

Parthipan K

Two students died tragically! The car overturned in the ditch!

இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

கர்நாடக மாநிலம் பெங்களூரு சஞ்சய்நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் இவரது மகன் சக்திவேல் (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் இவரது நண்பர் விவேகானந்தர்  தெருவை சேர்ந்த கிரிஸ்துராஜா மகன் ராஜ்குமார் (16). இவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

மேலும் சக்திவேலும் கிறிஸ்துராஜாவும் நண்பர்கள். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள நண்பர் டீக்கடை நடத்தி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் பிள்ளைகளின் காதணி விழாவிற்கு சேத்துப்பட்டு பகுதியில் பங்கேற்க கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்தக் கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி வேலூர் நோக்கி செல்லும் இடத்தில் திருப்பத்தூர் மாவட்டம் அருகே ஆத்தூர் கும்பம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர் கார் ஓட்டிச் சென்ற சக்திவேல் நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதினார். அப்போது எதிர் திசை சாலையில் அருகே உள்ள பள்ளத்தில் கார் பாய்ந்தது.

காரில்  பயணம் செய்த இரண்டு பேரும் பழத்தப்படுகாயம் அடைந்தனர். அவர்களை  அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மருத்துவ பரிசோதித்து அவர்கள் இருவரும் வரும் வழியிலேய  இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் இது குறித்து நாட்றம்பள்ளி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.