மீண்டும் கதாநாயகனாக வடிவேலு! டைரக்டர் சுராஜின் முன்னெடுப்பு!

0
126
Vadivelu acting as hero
Vadivelu acting as hero

மீண்டும் கதாநாயகனாக வடிவேலு! டைரக்டர் சுராஜின் முன்னெடுப்பு!

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக பெயர் பெற்றவர்.இவர் அனைத்து இயக்குனர்களுடனும் நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.இவர் நடித்தாலே அந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுப்பார்கள்.அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் இவர் மீது அன்பு வைத்துள்ளனர்.தமிழ் சினிமாவில் தற்போது இவர் நடிப்பதில் இருந்து சற்று விலகியிருக்கிறார்.

இந்நிலையில் இவரை மீண்டும் நடிக்க வைக்க பல நடிகர்களும் இயக்குனர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கதாநாயகனாக சில படங்களில் அவர் நடித்திருந்தார்.இருப்பினும் அந்த படங்கள் பெரிதும் வெற்றிபெறவில்லை.இருப்பினும் நடிகர் வடிவேலு இனிமேல் நகைச்சுவை நடிகராக நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.கதாநாயகனாக மட்டுமே நடிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவர் பல வருடங்களுக்கு முன்பு நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இவர் தற்போது படங்களில் நடிக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாகவே இருந்து வருகிறது.தலைநகரம் என்ற திரைப்படத்தில் நாய் சேகர் என்ற நகைச்சுவை கதாபத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பார்.அந்த படத்தில் அவருடைய நகைச்சுவை ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.2006ம் வருடம் இந்த படம் திரைக்கு வந்தது.இயக்குனர் சுராஜ் இந்த படத்தை இயக்கியிருப்பார்.இவர் தற்போது இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

நாய் சேகர் என்ற தலைப்பை வைத்து நடிகர் வடிவேலுவை நடிகராக வைத்து திரைப்படம் இயக்க இயக்குனர் சுராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் வடிவேலுவின் இரண்டாம் வருகையின் தொடக்கமாக இந்த படம் இருக்கலாம் என்றும் எதிர்பார்கப்படுகிறது.இயக்குனர் சுராஜ் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K