முதலமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டு தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

0
83

நோய் தொற்று பரவ காரணமாக பெற்றோரை பிரிந்து வாடும் குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். வங்கி வைப்பு நிதியாக இந்த தொகை வழங்கப்படும் என்று மோடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

வைப்புத் தொகையாக அளிக்கப்படும் நிதி 18 வயது முதிர்வு தொகையாக அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இலவச கல்வி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தனியார் பள்ளிகளின் கல்வி பயின்றான் பி எம் கேர் நிதியிலிருந்து அவர்களுக்கு நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். புத்தகங்கள் பள்ளி உடைகள் போன்ற செலவுகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் எனவும், அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

அதே போன்று தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவ காரணமாக, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தப்படும் என்ற புலவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசின் இல்லங்களில் அதோடு முடிவுகளிலும் விடுதிகளிலும் முன்னுரிமை அடிப்படையில் இடம் வழங்கப்படும். குழந்தைகளின் பெயரில் செலுத்தப்படும் ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதியில் அவர்கள் 18 வயது நிறைவடைந்த உடன் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.


இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அறிவிப்பிற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற பதிவில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து தாயுமானவர் ஆகி இருக்கின்றார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு ஒரு தலைமுறையின் தலைவன் தான் என்று இரைந்து வினை பெற்று உயர்ந்து நிற்கின்றார். குழந்தைகளின் கண்ணீர் துளிகளை முத்தாக்கும் வித்தை தெரிந்த முத்துவேலர் பேரனை வாழ்த்துகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.