வாணி ஜெயராம் மர்மம் மரணமா? பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! 

0
169

வாணி ஜெயராம் மர்மம் மரணமா? பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! 

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் மரணம் குறித்து என்ன நடந்தது என்று அவரது பணிப்பெண் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பாடகி வாணி ஜெயராம் வயது 78 வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து வாணி ஜெயராம் வீட்டு பணிப்பெண் மலர்கொடி இன்று காலை என்ன நடந்தது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதில் அவர்

வாணி ஜெயராம் வீட்டில் தனியாக தான் வசித்து வந்தார்.  கடந்த 10 ஆண்டுகளாக அவரது வீட்டில் எல்லா வேலையையும் நான் தான் செய்வேன் இன்று காலை வழக்கம் போல்  10:45 மணிக்கு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினேன். எந்த பதிலும் வரவில்லை.  கதவும் திறக்கப்படவில்லை. உடனே அவரது போனில் தொடர்பு கொண்டேன். அதையும் எடுக்கவில்லை. உடனே எனது கணவருக்கு போன் செய்து தகவலை கூறினேன். அவரும் வாணி ஜெயராமிற்கு ஃபோன் செய்யவே அவரது அழைப்பும் எடுக்கப்படவில்லை.

அழைப்பையும் எடுக்கவில்லை, கதவும் திறக்கப்படவில்லை என்பதால் சந்தேகம் அடைந்து கீழ் வீட்டில் உள்ளவர்களிடம் விஷயத்தை கூறினேன். பின்னர் அனைவரும் சேர்ந்து போலீசுக்கு தகவல் கூறினோம்.

மேலும் அவர் கூறுகையில் அவர் நல்ல உடல் நலத்துடன் தான் இருந்தார். பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து அவருக்கு நிறைய வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்தன. அவர் எந்த வியாதிக்கும் சிகிச்சை எடுத்து வரவில்லை. ஆனால் தற்போது அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது.

வாணி ஜெயராமின் மரணம் மர்ம மரணமா?  என சந்தேக மரணத்தின் அடிப்படையில் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.