விஜய், ரஜினி, கமல், சூர்யாவுக்கு திடீர் ட்வீட்செய்து பரபரப்பை ஏற்படுத்திய வனிதா!!

0
70

தயவு செய்து உங்கள் ரசிகர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள் என நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், கமல் மற்றும் சூர்யாவுக்கு நடிகை வனிதா விஜயகுமார் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

அண்மையில் இவரது பேச்சு தான் சமூக வலைதளங்களில் பொழுதுபோக்காகவே இருந்தது. அந்த மாற்றி மாற்றி புகார் கொடுத்துக் கொண்ட நிலையில், யாருக்கு எத்தனை கோடி கிடைத்தது என்று விவரம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயிருந்தனர்.

இப்ப வனிதா தல விட்டுட்டு கொஞ்சம் சீரியஸா பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஏனென்றால் குடும்ப பிரச்சனை காரணமாக தளபதி விஜய்யின் ரசிகர் பாலா எனும் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு “மாஸ்டர் படம் பார்க்காமலே விடை பெறுகிறேன்” என அவர் பதிவிட்ட ட்வீட் செய்துள்ளார். 

இது விஜய் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி விட்டது. இந்த சம்பவத்தை வைத்து தான் தற்போது சீரியஸாக ஒரு டாப்பிக்கை கையில் எடுத்துக் கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சோஷியல் மீடியாவை புரொமோட் செய்யும் விதமாக பதிவுகளை போடாமல், ரசிகர்களின் மனக் கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட வேண்டும் என்றும், இந்த நேரத்தில் அது நிறைய இளைஞர்களுக்கு தேவைப்படுகிறது என்றும் வனிதா பதிவிட்டுள்ளார்.முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினிகாந்த், கமல் மற்றும் சூர்யாவை டேக் செய்து இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார் நடிகை வனிதா. 

தளபதி விஜய்யின் ரசிகர் பாலா அவரது குடும்ப பிரச்சனைக்காக இறந்துள்ள நிலையில், அதற்காக பிரபலங்கள் என்ன செய்ய முடியும் என்று வனிதாவின் ட்வீட்டுக்கு கீழே நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் கொந்தளித்து வெளுத்து வாங்கி வருகின்றனர்.

 

author avatar
Parthipan K