திருமாவளவன் பெயரை சொல்லி போலீசார் மீது கல்வீசி தாக்குதல்! விசிக பிரமுகரின்‌ அராஜகம்

0
280

திருமாவளவன் பெயரை சொல்லி போலீசார் மீது கல்வீசி தாக்குதல்! விசிக பிரமுகரின்‌ அராஜகம்

புதுச்சேரி யூனியன் பிரதேசம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த தலித் பகுதியான வள்ளுவன் பேட் என்ற பகுதியில் குடித்துவிட்டு அங்குள்ள பெண்களிடம் தகராறில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் சதீஷ் என்பவர் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வில்லியனூர் பகுதி காவல் துறையினர் அவரை கைது செய்ய முற்படும் போது காவல் துறையினரை தாக்கிவிட்டு தன்னுடைய சமூகத்தின் பெயரை சொல்லி எங்கள் தலைவர் திருமாவளவனை தாண்டி என்னை கைது செய்வீர்களா, சாதி வெறி பிடிச்சவனுங்களா என்று காவல் துறையினரை மிரட்டி அவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடி இருக்கிறார்.

இந்நிலையில் சாதியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டு தப்பி ஓடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் சதீஷை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீடியோ ஆதாரம்:

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

Previous articleகாங்கிரசாரின் நாடகம் எடுபடாது; குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக எடியூரப்பா கருத்து
Next articleநீட் நுழைவு தேர்வு எழுதுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here