ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நிறுவனம் tiruppur.nic.in என்கிற அதிகாரபூர்வ பக்கத்தில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
1) நிறுவனம்:
ஆவின்
2) இடம்:
திருப்பூர்
3) காலி பணியிடங்கள்:
மொத்தம் 08 காலி பணியிடங்கள் உள்ளது.
4) பணிகள்:
கால்நடை ஆலோசகர்
5) கல்வித்தகுதிகள்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் அல்லது பல்கலைக்கழகங்களில் B.V.Sc.,& AH படித்து முடித்திருக்க வேண்டும். இதுதவிர கணினி இயக்குவதற்கான அறிவு மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் இருசக்கர வாகனம் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
6) சம்பளம்:
நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.43,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
7) தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கையொப்பத்துடன் கூடிய பயோடேட்டாவை நேர்காணலில் சமர்ப்பிக்க வேண்டும்.
8) நேர்காணல் நடைபெறும் இடம்:
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்,
ஆவின் பால் சில்லிங் சென்டர்,
வீரபாண்டி பிரிவு,
பல்லடம் சாலை,
திருப்பூர் 641 605.
9) நேர்காணல் நடைபெறும் நாள்:
14.12.2022