விஜய் முன்னிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட SAC… இதுவரை வெளிவராத தகவல்

0
100

விஜய் முன்னிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட SAC… இதுவரை வெளிவராத தகவல்

விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய யுடியூப் சேனலில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும் அவரது தந்தைக்கும் சுமூகமான உறவு இல்லை என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகிக் கொண்டுள்ளன. மேலும் SAC-ம் இது சம்மந்தமாக ஊடகங்களிடம் பேசி வருகிறார். இந்நிலையில் இப்போது வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றம் SAC –ன் அலுவலகத்தை ஜப்தி செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது SAC தான் நடத்தி வரும் யுடியூப் சேனலில் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் “நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன். ஷோபா இந்து மதக் குடும்பத்தில் பிறந்தவர். நாங்கள் இருவரும் மற்றவரை மதம் மாற சொல்லி கேட்டதே இல்லை.  நாங்கள் இருவரும் சர்ச்சுக்கும் போவோம். கோயிலுக்கு போவோம். திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்துள்ளோம். எந்த மதத்தையும் சாராமல் வாழ்ந்து வருகிறோம்.

எங்கள் திருமணம் முதலில் இந்து மத முறைப் படி நடந்தது. சிவாஜியின் மனைவி கமலாம்பாள்தான் தாலி எடுத்துக்கொடுத்தார். பின்னர் ஒருநாள் ஷோபா, என்னிடம் நாம் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாமா எனக் கேட்டார். நான் சரி என்று கூறினேன். அப்போது விஜய்க்கு 6 வயது. ஷோபா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். விஜய் முன்னிலையில் நுங்கம்பாக்கம் சர்ச்சில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ எங்கள் திருமணம் நடந்தது.

விஜய் யாரிடம் வேண்டுமானாலும் பெருமையாக சொல்லலாம் தன் தலைமையில் தன் பெற்றோரின் திருமணம் நடந்தது என்று. அந்த திருமணம் நடந்த ராசியோ என்னவோ எனக்கு அடுத்த ஆண்டு சட்டம் என் கையில் படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்து” பேசியுள்ளார்.

ஷோபாவுக்கு பிறந்த இரண்டாவது குழந்தையான விஜய்யின் சகோதரி சில ஆண்டுகளுக்குப் பிறகு உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.