நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் நிலையில் தனது குறிக்கோளாக 2026 தேர்தலை நோக்கி தற்போது தனது கட்சியை தயார்படுத்தி வருகின்றார்.
தவெக தலைவர் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே கூறியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவர் சீமானின் பேச்சு விஜயின் வீச்சு ஆகிய இரண்டும் சேர்ந்து தமிழகத்தில் இதுவரை யாரும் காணாத அளவில் மூன்றாவது அணியை மக்கள் பார்ப்பார்கள் எனவும் இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியிருக்கின்றார்.
2026 ஆம் தேர்தலுக்கு அதிமுக மற்றும் திமுக கூட்டணி தயாராக உள்ள நிலையில் திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியே போகாது. அதேபோல் வேறு புதிய கட்சி வர வாய்ப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேர வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மூன்றாவதாக விஜயின் நிலைப்பாடு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் அவர் இணைந்தால் அவருக்கான தனித்துவம் போய்விடும். அதனால் அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் விஜய், சரத்குமார் மற்றும் கமலஹாசன் உள்ளிட்டோர் தனித்தன்மையுடன் கட்சியை தொடங்கிய பொழுது திராவிட கட்சிகளுடன் இணைந்து விட்டார்கள்.
ஆனால் அவர்களுடைய கட்சிகள் காணாமல் போனது. அந்த தவறை விஜய் செய்யக்கூடாது என உறுதியாக இருக்கின்றார். விஜய் போலவே சீமானும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ள நிலையில் விஜய் மற்றும் சீமான் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்க வாய்ப்புள்ளது. மேலும் விஜய்க்கு 22 சதவீதம் வாக்குகள் , சீமானிடம் 8 சதவீதம் வாக்குகள் இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறப்படும் நிலையில் இவை இரண்டும் சேர்ந்தால் 30 சதவீதத்திற்கும் மேலாக வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது . அதனால் இந்த இரண்டு கட்சிகளும் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.