வேனிலும் ரசிகர்களின் மனதிலும் ஏறிய விஜய்!

0
71

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பை பார்ப்பதற்கும் விஜய் பார்ப்பதற்கும் தினமும் அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூறிவருகின்றனர்

இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் விஜய்யை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று பல மணி நேரமாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்தது மட்டுமன்றி படப்பிடிப்பு குழுவினர்களின் வேன் ஒன்றின் மீது ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்தார்

அதன்பின் தனது மொபைல் போனை எடுத்து ரசிகர்களுடன் அவர் செல்பியும் எடுத்துக் கொண்டார். முதன்முதலாக ரசிகர்களுடன் அவர் செல்பி எடுத்துக் கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமான வரி ரெய்டுக்கு பிறகு விஜய் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும் ரசிகர்கள் காட்டி வரும் அன்புக்கு அவர் நெகழ்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் வேனில் ஏறியது மட்டுமின்றி ரசிகர்களின் நெஞ்சிலும் ஆழமாக ஏறிவிட்டார் என்றுதான் இந்த சம்பவங்கள் காட்டுகின்றன

author avatar
CineDesk