“எப்பதான் படத்த கையில கொடுப்பீங்க…” கோப்ரா பட இயக்குனரை கேட்டெ ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

0
118

“எப்பதான் படத்த கையில கொடுப்பீங்க…” கோப்ரா பட இயக்குனரை கேட்டெ ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட கோப்ரா திரைப்படம் கடைசி நேரத்தில் தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது.

மகான் திரைப்படத்துக்குப் பின்னர் விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா திரைப்படம். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே சென்றது. இந்த படத்தில் விக்ரம்  7 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார். சமீபத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடந்தது. ஆனால் தற்போது வரை படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் முடியாததால் சொன்ன தேதியில் ரிலீஸாகாது என சொல்லப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த விநியோக நிறுவனம், இயக்குனரிடம் “எப்போது படத்தை முடித்து கையில் தருவீர்கள்” என்று கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு ஆகஸ்ட் இறுதிக்குள் படத்தை ஒப்படைப்பதாக அவர் பதில் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் செப்டம்பர் மாதம்தான் ‘கோப்ரா’ ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.