ராஜஸ்தான் தோல்வி குறித்து விராட் கோஹ்லி! நான் பந்து வீசியிருந்தால் RR அணி 40 ரன்களுக்கு ஆல் அவுட்!!

0
99
#image_title
ராஜஸ்தான் தோல்வி குறித்து விராட் கோஹ்லி! நான் பந்து வீசியிருந்தால் RR அணி 40 ரன்களுக்கு ஆல் அவுட்!
நேற்று அதாவது மே 14ம் தேதி நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோஹ்லி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று அதாவது மே 14ம் தேதி நடந்த முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அபாரமான  பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10.3 ஓவர்களில் 59 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் டிரஸ்ஸிங் ரூமில் இந்த போட்டி குறித்து பேசப்பட்டது. அதில் கருத்து தெரிவித்த விராட் கோஹ்லி “நான் பவுலிங் செய்திருந்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 40 ரன்களுக்கு ஆல் ஆகி இருப்பார்கள்” என்று கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
author avatar
Savitha