இரத்த மூலம் குணமாக வேண்டுமா? சூப்பரான இரண்டு டிப்ஸ் இதோ! 

Photo of author

By Sakthi

இரத்த மூலம் குணமாக வேண்டுமா? சூப்பரான இரண்டு டிப்ஸ் இதோ! 

Sakthi

Updated on:

Want to be healed by blood? Here are two great tips!
இரத்த மூலம் குணமாக வேண்டுமா? சூப்பரான இரண்டு டிப்ஸ் இதோ!
ஒரு சிலருக்கு இரத்த மூல நோய் ஏற்பட்டு அதனால் பல வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த பதிவில் இரத்த மூலத்தை குணப்படுத்த உதவியாக இருக்கும் இரண்டு சூப்பரான மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இரத்த மூலம் குணமாக முதல் மருத்துவ முறை…
தேவையான பொருட்கள்…
* துத்தி இலை
* விளக்கெண்ணெய்
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் விளக்கெண்ணெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள துத்தி இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். வதக்கிய பின்னர் அடுப்பை அணைத்து விட்டு இதை இரத்த மூலம் உள்ள இடத்தில் கட்டி வந்தால் இரத்த மூலம் குணமாகும்.
இரத்த மூலம் குணமாக இரண்டாவது மருத்துவ முறை…
தேவையான பொருட்கள்…
* அருகம்புல்
* பால்
செய்முறை…
முதலில் அருகம்புல் 20 கிராம் அளவு எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த அருகம் புல்லை மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த அருகம்புல் கலவையை காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குணமாகும்.