நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர வேண்டுமா! தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்!
பெண்களுக்கு எப்பொழுதுமே அவரவர்களின் முடி மீது ஆசை இருக்கும். அடர்த்தியான நீளமான தலைமுடி வேண்டும் என அனைவருமே நினைப்பதுண்டு. இவ்வாறு நம்முடைய தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் சுத்தமான பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் .
அதனை ஈரப்பதம் இல்லாமல் நன்கு துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் சுத்தமான மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 1/4 லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 25 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலந்து தினந்தோறும் வழக்கமாக தேய்த்துக் கொள்ளலாம். விளக்கெண்ணெய் சேர்ப்பதன் மூலம் நம்முடைய தலையில் துர்நாற்றமோ அல்லது பிசுபிசு தன்மையோ ஏற்படாது.