எச்சரிக்கை! இந்த இருமல் மருந்தை குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு!!

0
164

எச்சரிக்கை! இந்த இருமல் மருந்தை குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு!!

உஸ்பெகிஸ்தானில்,இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரும்பல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இரும்பல் சிரப்பை குடித்ததால் 18 குழந்தைகள் உயிர் இழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத் துறை கூறியுள்ளது.

இந்த இரும்பல் சிரப்பினை ஆய்வக பரிசோதனை செய்தபோது இதில் எத்திலின் கிளைக்கோஸ் என்ற நச்சுப்பொருள் இருந்ததாகவும் இதுவே குழந்தைகள் இறப்புக்கு காரணம் என்றும் உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதாவது இந்த சிரப்பை மருத்துவர்கள் பரிந்துரை இன்றி,பெற்றோர்கள் அல்லது
பார்மாசிஸ்டுகளின் அறிவுறுத்தலின்படி குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும்,நிலையான அளவை தாண்டி அதிகமாக இந்த மருந்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரும்பல் மருந்தை குடித்து 18 குழந்தைகளின் உயிரிழப்பை தொடர்ந்து,டாக்-1 மேக்ஸ் மாத்திரைகள் மற்றும் சிரப்புகள் அனைத்தும் மருந்தகங்களில் இருந்து திரும்பப் பெறப்பட்டு விட்டதாகவும் உஸ்பெஸ்கிதான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்களின் பரிந்துரையின்றி பெற்றோர்களே இருமல் மருந்தோ அல்லது சளி மருந்தோ கொடுப்பது மிகவும் தவறு.பெற்றோர்கள் தாங்களாகவே எந்தவித மருந்தும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Pavithra