ஹேக் செய்யும் மோசடி கும்பலுக்கு வார்னிங்! புதிய சைபர்கிரைம் பாடத்திட்டங்கள் அமல்! 

0
81
Warning to hacking gangs! New Cybercrime Curriculum Implemented!
Warning to hacking gangs! New Cybercrime Curriculum Implemented!

ஹேக் செய்யும் மோசடி கும்பலுக்கு வார்னிங்! புதிய சைபர்கிரைம் பாடத்திட்டங்கள் அமல்!

இந்தியாவின் உள்ள கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட அமைப்புதான் யுஜிசி. அது மட்டும் இன்றி உயர்கல்வி குறித்து முடிவுகளை எடுப்பதற்கும் இந்த அமைப்பிற்கு அதிகாரம் உள்ளது. தற்பொழுது யுஜிசி புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது. உலகம் எந்த அளவு டெக்னாலஜியாக மாறிக்கொண்டு இருக்கிறதோ அந்த அளவில் அதற்கு ஏற்ற பாதிப்புகளையும் சந்தித்து வருகிறது.

இந்த மாடல் உலகில் மக்கள் பலர் தங்களின் பணத்தை சர்வ சாதாரணமாக ஆன்லைன் மோசடியில் இழந்து விடுகின்றனர். பணம் மட்டுமில்லை நமது செல்போனையே ஹேக் செய்து நம்மிடம் பணம் கேட்டு மிரட்டும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. இது பாமர மக்களுக்கு மட்டுமின்றி பெரிய பெரிய சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கூட நடக்கிறது.அவர்களின் அதிகாரப்பூர்வ இணையத்தை ஹாக் செய்வதையே சில மோசடி கும்பல் வேலையாக வைத்துள்ளது.

இதனையெல்லாம் தடுக்கும் விதமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் க்ரைம் பாடப்பிரிவுகள் தொடங்க வேண்டும் எனக் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் இனிவரும் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை சைபர் கிரைம் பாடப்பிரிவுகள் காணப்படும். மாணவர்கள் அந்த பாடப்பிரிவுகளை படிப்பதன் மூலம் ஹேக்கர்கள் உருவாகுவதை தடுக்கலாம்.