நாங்கள் அனைத்தையும் சட்டரீதியாக  சந்திப்போம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் கோவம் அடைந்த அமைச்சர்!!

0
37
We will meet all legally!! Angry minister at press conference!!
We will meet all legally!! Angry minister at press conference!!

நாங்கள் அனைத்தையும் சட்டரீதியாக  சந்திப்போம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் கோவம் அடைந்த அமைச்சர்!!

அமலாக்கத்துறை  ஜூலை 17 ஆம் தேதி உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில்  திடீர் சோதனை நடத்தியது. அதற்கு காரணம்  கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அதன் மூலம் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கிற்கு தற்போது சோதனை நடத்தப்பட்டது.

அதனையடுத்து 17 ஆம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் வீட்டில் சோதனை  தீவரமாக நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீதர காலனியில் அமைச்சர் வீடு மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின் அவரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்கள். அதனை தொடர்ந்து 5 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் நேற்று மாலை நேரில் ஆஜராகி அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக தமிழக முதல்வர் பேசி வந்தார். இதனையடுத்து நேற்று  முதல்வர் இல்லத்தில் நேரில் சந்தித்த அமைச்சர் பொன்முடி அவரிடம் ஆலோசனை பெற்றார். அந்த சந்திப்பில் அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆலோசனை நடத்திருந்தார்கள்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். உயர்கல்வித்துறையில் இருந்து உங்களை முடக்குவதற்காக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதா என்று கேட்டார்கள். அதற்கு பதிலளித்த அமைச்சர் அதெல்லாம் நீங்களே முடிவு பண்ணி, ஏதுவானாலும் சொல்லுவீங்க என்றும், நாங்க பாக்கத்து கிடையாது என்றும் கூறினார்.

மேலும் அவர் நாங்கள் அனைத்தையும் சட்டரீதியாக  சந்திப்போம் என்றும் குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது கோவம் அடைந்தார். அதன் பின் அங்கு இருந்து சென்றார்.

author avatar
Jeevitha