என்னது நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேனா? சூர்யாவின் நச் பதில்

0
37

என்னது நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேனா? சூர்யாவின் நச் பதில்

தமிழ் சினிமாவில் பரபரப்பான ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.தமிழில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.சமீபகாலமாக இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சூர்யாவின் அடுத்து படம் என்னவென்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவிற்கு தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

இதற்கு முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு தியா,தேவ் என இரு குழந்தைகள் இருக்கின்றனர்.இந்நிலையில் இவர் மும்பையில் செட்டிலாகி விட்டார் என்ற தகவல் இணையத்தில் சமீபகாலமாக உலா வந்து கொண்டிருக்கின்றது.இது குறித்து அவரது ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.அதற்கு பதிலளித்த சூர்யா நான் மும்பையில் செட்டிலாக வில்லை.தனது இரு குழந்தைகளும் மும்பையில் படித்து வருகின்றனர்.அவர்களைப் பார்ப்பதற்காக தான் மும்பை சென்று வருகிறேன்.தற்பொழுது வரை நான் சென்னையில் தான் வசித்து வருகிறேன் என்று கூறினார்.

இதையடுத்து சூர்யா மும்பையில் இருக்கும் ஒரு விமான நிலையத்தின் பார்க்கிங்கை மட்டும் ரூ.200 கோடிக்கு குத்தகைக்கு எடுத்து மாதம் ரூ.20 கோடி வரை சம்பாதித்து வருகிறார்.இதன் காரணமாகவே அவர் அடிக்கடி மும்பை சென்று வருகிறார் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர்.