அம்மன் படத்துல நடித்தபோது படுகவர்ச்சி காட்டி நடித்தேன்.. மனம் திறந்த ரம்யாகிருஷ்ணன்!

0
27
#image_title

அம்மன் படத்துல நடித்தபோது படுகவர்ச்சி காட்டி நடித்தேன்… மனம் திறந்த ரம்யாகிருஷ்ணன்!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் பல கதாபாத்திரங்கள் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர். ரஜினி, கமல், அர்ஜூன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.  தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜூன் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு அசத்தினார்.

தற்போது தமிழ் உட்பட பல மொழிகளில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி1, பாகுபலி 2 படங்களில் சிவகாமி கதாபாத்திரத்தில் ராஜமாதாவாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார். 2003ம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

1995ம் ஆண்டு ரம்யா கிருஷ்ணன் ‘அம்மன்’ என்ற படத்தில் நடித்தார். இப்படம் தெலுங்கு டப்பிங் செய்யப்பட்டது தமிழில் வெளியானது. இப்படம் நல்ல வசூல் சாதனை படைத்தது.

இதனையடுத்து, அடுத்தடுத்து சில படங்களில் அம்மன் வேடத்தில் நடித்தார். அம்மனாக நடித்துக்கொண்டிருக்கும்போதே ரம்யா கிருஷ்ணனுக்கு சில படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடினார்.

சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டியில் பேசிய ரம்யாகிருஷ்ணன், நான் அம்மன் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே எனக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் கிளாமராக நடித்திருந்தேன். நான் நடித்ததிலேயே அதிக கிளாமராக அதில் தான் நடித்தேன். ஆனால், அந்த படமும், அம்மன் படமும் ஒரே சமயத்தில் வெளியானது. எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. ஆனால், ரசிகர்கள் எனது 2 படங்களையும் ஏற்றுக்கொண்டார்கள். அம்மனாக நான் வரும் காட்சிகளில் கற்பூரமெல்லாம் காட்டி வழிபட்டார்கள். அது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது என்றார்.

author avatar
Gayathri