இது என்ன அவர் தொகுதியா கேள்வி கேட்ட பிரபலம்! கொந்தளித்த திமுகவினர்!

0
54

ஒரு சட்டசபை உறுப்பினர் தமிழகம் முழுவதும் சென்று மருத்துவமனைகளில் ஆய்வு செய்வதும் திட்டப்பணிகளை ஆரம்பித்து வைப்பதும் அமைச்சர்கள் அவரை அடிபணிந்து அழைத்து செல்வதையும் பார்த்தோமானால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார். அதோடு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, உதயநிதி என்ன சூப்பர் பவர் முதலமைச்சரால் அமைச்சர்களை அருகில் வைத்துக்கொண்டு சட்டசபை உறுப்பினராக இருப்பவர் திட்டப் பணிகளை ஆரம்பித்து வைப்பதும், ஆய்வு செய்வதும், அதிகார துஷ்பிரயோகம் கிடையாதா அமைச்சரவைக்கு அவமதிப்பு கிடையாதா இதுதான் சூப்பர் முதலமைச்சரின் பவரா எனவும், கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பியிருக்கிறார்.

அவருடைய இந்தக் கேள்விகளுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தினர் ஒருசிலர் அவருடைய தொகுதிக்குள் சென்று ஆய்வு செய்கிறார். அந்த துறை அமைச்சர் இருக்கிறார் எனவும், அவர் தேர்தலில் நின்று தமிழகம் முழுவதும் பொது மக்களை சந்தித்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி. இதனை எல்லாம் கேள்வி கேட்க நீங்கள் யார் என்று ஆவேசமாகி இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் அண்ணாநகர் சட்டசபை தொகுதியில் உதயநிதியின் செயல்பாட்டையும், அது தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உதயநிதி அண்ணாநகர் சட்டசபை உறுப்பினர் அண்ணன் எம் கே மோகன் அவர்களின் ஏற்பாட்டில் அண்ணாநகர் பெருவிரல் மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட நோய்த்தொற்று சிகிச்சை மையத்தை திறந்து வைத்து அங்கே இருக்கின்ற சுகாதார பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

 

https://twitter.com/BJP_Gayathri_R/status/1399330577543618560?s=20

அத்துடன் ஆக்ஸிஜன் வசதிகளைக் கொண்ட பேருந்து சிகிச்சை வசதிகளை ஆரம்பித்து வைத்திருக்கிறோம் இந்த நிகழ்வில் அண்ணன்கள் மாண்புமிகு அமைச்சர் பிகே சேகர்பாபு,தயாநிதிமாறன் போன்றோர் பங்கேற்பார்கள் என்ற உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டு அண்ணா நகர் தொகுதி என்ன உதயநிதி தொகுதியா? என்றும்,காயத்ரி தெரிவித்தது உண்மைதானே இதற்கு ஏன் அந்த கட்சியை சார்ந்தவர்கள் ஆவேசம் உடைக்கிறார்கள் எனவும், இணையதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.