அரசு வேலைகளுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்!! இது தெரிந்தவுடன் அரசு வேலைக்கு தான் போவீர்கள்!! 

0
39

அரசு வேலைகளுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்!! இது தெரிந்தவுடன் அரசு வேலைக்கு தான் போவீர்கள்!!

தற்போது எல்லாம் அனைவரும் அரசு வேலையில் வாங்குவதில் ஆர்வம் கட்டி வருகின்றனர்.  அரசு வேலை வாங்குவது அனைவரின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. அதன்  காரணம்   தனியார் நிறுவனத்தை விட அரசு வேலையில் அதிக சம்பளம் கிடைப்பதால் அனைவரும் அரசு வேலை வாங்க வேண்டும்  என்று நினைக்கிறார்கள். ஏன் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அதிக சம்பளம் என்று பலருக்கும் தெரிவதில்லை. தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் இருந்து 31% DA உயர்த்தி உத்தரவிட்டது. DA என்றால் dearness allowance என்பது அர்த்தம் இதுவே அடிப்படை சம்பளமாக இருக்கிறது. இந்த சம்பளத்தை நாட்டு விலைவாசி ஏற்ற தாழ்வு ஆராய்ந்து அதன் பின்னர்  அதிக ஊதியம் வழங்கப்படும். முதலில் நாட்டில் ஏற்கனவே என்ன விலைவாசி எவ்வளவு இருக்கிறது தற்போது எவ்வளவு  உள்ளது கணக்கிட்டு பார்த்து வழங்குவார்கள்.  மேலும் வருடத்திற்கு இரண்டு முறை DA உயர்த்தி அரசு உத்தரவிட்டு வருகிறது. AICPIN- all India consumer price index இது பொறுத்து DA ஊதியம் அமையும்.  தற்போது வரை மத்திய அரசு 34 சதவீதமும் தமிழக அரசு 31 சதவீதமும் இந்த ஊதிய தொகையை வழங்கி வருகிறது. மேலும் இந்த வேலை  மட்டுமின்றி தனியார் வேலைகளுக்கும் இந்த DA சம்பளம் உள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் அதனை  தனியாக தராமல்  மொத்த சம்பளமாக கொடுத்து விடுகிறார்கள். ஹோட்டல்  பணியாற்றும் பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூபாய் 6127 மற்றும் உயர்த்தப்பட்ட  (DA) ரூபாய் 6708 மொத்தமாக 12, 835 வழங்க வேண்டும். ஆனால் தனியார் நிறுவனம் மொத்த சம்பளமாக அவர்களுக்கு  வழங்குகிறார்கள் அடிப்படை ஊதியம் 6127 கொடுக்காமல் ஒரு ஹோட்டல் உரிமையாளர் இருந்தால் அவர் மீது புகார் அளிக்கலாம். அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் மொத்த சம்பளம் 50000 ரூபாய் வரை உள்ளது. அரசு ஊழியர்களுக்கு தனித்தனி துறைகள் உள்ளதால் அந்தந்த துறைக்கு ஏற்ப பணிக் ஏற்ப ஊதியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அடிப்படை சம்பளம் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

author avatar
Jeevitha