வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் கட்டுவது எதற்காக?! இதுதான் காரணமா!!

0
83

வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் கட்டுவது எதற்காக?!

எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா என்ற அமிலமானது, மிளகாயில் உள்ள பென்னியோசிட் என்னும் காரத்துடன் இரசாயன பகுப்பாகி, மீதிரியேட் என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவானது, ஓட்டுனரை தூங்காமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பார்த்துக் கொள்கிறது. இதன் காரணமாகவே தான், எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் ஆகியவற்றை வாகனங்களுக்கு முன்னால் கட்டுகின்றனர்.

சுபகாரியங்கள் செய்யும் நேரத்தில் அல்லது வெளியில் சுபகாரியங்களுக்கான செல்லும் நேரத்தில் தும்மல் வந்தால் அது கெட்ட சகுனம் எனக் கூறுவது எதனால்?

தும்மல் ஒரு சாதாரண இயற்கை செயலாகும். ஒருவர் தும்மினால் அவருக்கு உடம்பு சுகமில்லை எனக்கருதுவது தான் வழக்கம். எனவேதான் வெளியே போகும் போது தும்மினால் உடம்பு சரியில்லாமல் போக வெளியில் போக வேண்டாம் என்று எண்ணி, ஒரு சொம்பு வெந்நீரினை கொடுத்து அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதை தான் தற்போது நாம் அபசகுணம் என்று மாற்றி உள்ளோம்.

இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தவர்கள் எதற்காக கொல்லைப்புறமாக வீட்டிற்கு வர வேண்டும் தெரியுமா?

அந்த காலத்தில் குளியலறை வீட்டிற்கு வெளியில் உள்ள கொல்லைப்புறத்தில் தான் அமைந்திருக்கும். மேலும், நோய் கிருமிகள் நம்மை அண்டாமல் இருக்க வீட்டிற்குள் குளித்துவிட்டு வர வேண்டும் என்பதனை வலியுறுத்தி தான் இறந்தவர் வீட்டிற்கு சென்று வந்தவர்கள் கொல்லைப்புறமாக வரவேண்டும் என்று அந்த காலத்தில் கூறினார்கள்.

சூரிய உதயத்திற்கு முன்பு எதற்காக எழுந்திருக்க வேண்டும்?

சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்தால் மனமும், மனநிலையும் அந்த நாள் முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும், முன்னறிவித்த நாளுக்கு திட்டமிடுவதற்கும், அதனை உறுதிப் படுத்துவதற்கும் நமக்கு போதுமான நேரம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே தான் சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும் என்று அந்த காலத்தில் கூறினார்கள்.

author avatar
Jayachithra