மது பிரியர்களுக்கு இனி இது அவசியம்!அரசு அதிரடி உத்தரவு!

0
185
Wine lovers no longer need it! Government orders action!
Wine lovers no longer need it! Government orders action!

மது பிரியர்களுக்கு இனி இது அவசியம்!அரசு அதிரடி உத்தரவு!

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

ஆனாலும் தொற்றின் விகிதம் என்னவோ அதிகரித்து தான் வருகிறது.இதை தடுக்க அரசு முழு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது.மாநில அரசுகள் ஒரு புறம் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் எட்டவா மாவட்டத்தில் சைஃபா என்ற இடத்தில் மதுபான விற்பனை நிலையங்களில் ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

அதில் மதுபானம் வாங்க வேண்டுமானால் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே மது விற்கப்படும் என உள்ளது.மேலும் சான்றிதழ் இல்லாதவருக்கு கட்டாயம் மது விற்பனை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

எட்டவா மாவட்ட கூடுதல் நிர்வாக அதிகாரி ஹேம்குமார் சிங் அவர்களின் அறிவுறுத்தல் படி இந்த அறிவிப்புகள் செயல்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில் அனைத்து விற்பனையகங்களிலும் இது கட்டாயமாகக் பின்பற்றப்படும் என்றும், மீறினால் கடுமையான தண்டனை பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

கோரோனாவை ஒழிக்கவே இந்த திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Previous articleமுஸ்லிம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவல நிலை! பின்னணியின் மர்மம் என்ன?
Next articleஆயிரக்கணக்கில் செத்துக் கிடக்கும் மீன்கள்! துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here