முஸ்லிம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவல நிலை! பின்னணியின் மர்மம் என்ன?

0
54
Tragedy for Muslim children! What is the mystery of the background?
Tragedy for Muslim children! What is the mystery of the background?

முஸ்லிம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவல நிலை! பின்னணியின் மர்மம் என்ன?

கொரோனா தொற்றானது அனைத்து நாடுகளிலும் ஆட்டி படைத்து வருகிறது.இதற்கிடையே புயல்,பூகம்பம் என இயற்கை சீற்றங்களையும் அனைவரும் எதிர் கொண்டு வருகிறோம்.அந்தவகையில் ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்று தான் நைஜீரியா.நைஜீரியா நாட்டில் நைஜீரியா நகரத்தில் தெகினா என்ற பகுதி உள்ளது.அந்த தெகினா பகுதியில் சாலிகோ டாங்கோ என்ற முஸ்லிம் பள்ளி ஒன்று செயல்பட்டு  வருகிறது.

அந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.திடீரென்று அந்த பகுதியிலுள்ள முஸ்லிம் பள்ளியில் மோட்டார் வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்தனர்.அவர்கள் கையில் எடுத்து வந்த துப்பாக்கியால் அங்குள்ள ஒருவரை முதலில் சுட்டுக்கொன்றனர்.அதனைபார்த்த மாணவர்கள் அலறியடித்து கூச்சலிட்டனர்.அவரை கொன்றதை அடுத்து அந்த மர்ம நபர்கள் துப்பாக்கி காட்டி அங்குள்ள மாணவர்களை கடத்தி சென்றனர்.அங்கு மொத்தம் 200 மாணவர்களை கடத்தி சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மாணவர்களை கடத்தி சென்றதை தொடர்ந்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் 200 மாணவர்கள் தான் கடத்தப்பட்டார்களா என உறுதிபடுத்தும் படி விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆப்ரிக்கா நாட்டில் ஒன்றான நைஜீரியாவில் உள்ள பள்ளிகளில்  புகுந்து தொடர்ந்து மாணவர்கள் கடத்தப்படுவது முடிவில்லா தொடர் கதையாகவே தான் உள்ளது.கடத்தியவர்களிடம் அரசாங்கம் பேச்சு வாரத்தை நடத்தி விடுவித்து கொண்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.