மகளிர் உதவித்தொகை 2500 ரூபாய்!! அறிவித்த முதலமைச்சர்!!

Photo of author

By Vinoth

மகளிர் உதவித்தொகை 2500 ரூபாய்!! அறிவித்த முதலமைச்சர்!!

Vinoth

Women's Scholarship 2500 Rupees!! The Chief Minister announced!!

மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுகிறார்கள். அந்த திட்டம் அனைவருக்கும் இல்லாமல், ஒரு சில விதி முறைகள் இருந்தது. அது ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கும், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், ஒரு வருடத்தில் 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படாது என அரசு அறிவித்தது.

அந்த நிலையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வழங்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த தலைமைகழகம் ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் தற்போது ரூ.1,000 வழங்குப்பட்டு வருகிறது அதனை அதிகப்படுத்தி ரூ.2000  தரவேண்டும். விரைவில் இந்த அறிவிப்பு வெளியாக்கும் என அனைவரின் எதிர்ப்பர்ப்பபாக  உள்ளது.

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 2000 ரூபாய் வரை மகளிர் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 13 மற்றும் 20-ம் தேதி நடைப்பெற உள்ளது. தற்போதைய முதல்வர் ஹேமந்த் சோரன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் மீண்டும் முக்தி மோர்ச்சா அரசு ஆட்சிக்கு வந்தால் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழகப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் மாதம்  7 கிலோ உணவு தானியம், வருடம் 2 சிலிண்டர்  இலவசமாக வழங்கப்பட்டும் என அந்த கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.