DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் வழங்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி வெற்றி பெற்ற இரண்டு ஆண்டுகள் கழித்து இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் பெண்கள் முழுமையாக திருப்தி அடையவில்லை. இந்த திட்டம் செல்லுபடி ஆகவேண்டும் என்றால் தாங்கள் கூறிய வரைமுறை கீழ் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தது.அதன்படி இத்திட்டம் பல மகளிருக்கும் கிடைக்காமலே போனது. நாளடைவில் திமுக மீதான அதிருப்தியானது வளரவே திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
அந்த வகையில் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் என அனைவருக்கும் இத்திட்டம் மூலம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தது.தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் இனி வருடம் தோறும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் அச்சமயத்தில் விடுபட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து ஆயிரம் உதவித்தொகையில் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
அதன்படி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், மே மாதம் முடிந்து ஜூன் மாதம் முதல் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யலாம்.யாருக்கெல்லாம் இந்த உதவி தொகை திட்டம் கிடைக்கவில்லையும் அவர்கள் பயன்பெறலாம் என கூறியுள்ளார். அதேபோல மாற்றுத் திட்டத்தின் மூலம் பயனடையும் மகளிருக்கு கட்டாயம் இத்திட்டம் செல்லுபடி ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.