அடுத்த MGR ,விஜயகாந்த் நீ தான்யா! ஆனா நெட்டிசன்கள் சொன்ன அறிவுரை தான் டாப்!

0
193
#image_title

டிசம்பர் 28 2023 ஆம் ஆண்டு கலியுக கர்ணன் என்று அழைக்கப்படுகின்ற விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சு பிரச்சனையின் காரணமாக உயிர் இழந்தது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

 

இன்ஸ்டாகிராமில் இருந்து, பேஸ்புக் இருந்து, யூடியூபில் இருந்து, அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர், யூடூப் நண்பர்கள் மற்றும் மக்கள்.

 

அவரை போலவே விஜயகாந்த் நண்பர் , இயக்குனர், தயாரிப்பாளர் என ராவுத்தர். இவரும் விஜயகாந்த் போலவே தினமும் 100 பேருக்கு சாப்பாடு போடுவாராம். பல இயக்குனர் இவரது வீட்டில் உணவு உண்டு இருக்கின்றனர்.

 

அதே போல் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அன்று பயங்கரமான வெள்ளம் சென்னையை தலைகீழாக மாற்றியது. அப்பொழுது பாலா, அமுதவானன், அறந்தாங்கி நிஷா ஆகியோர் அரசு செய்ய முடியாத உதவியை மக்களுக்கு செய்தனர்.

 

தன்னுடைய சொந்த செலவில் 4 இலவச ஆம்புலன்ஸூம் வாங்கி கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் கோரதாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சுமாா் 200 குடும்பத்திற்கு ரூ.1000 கொடுத்து உதவினார்.

 

மேலும் குடிநீர் சுத்தகரிப்பு  வண்டி வங்கி தந்து மேலும் பல உதவிகளை செய்து வருகிறார். அமுதவாணன் மற்றும் kpy பாலா இணைந்து 3 லட்சம் செலவில் இதை செய்து கொடுத்துள்ளனர்.

 

எந்த பகுதியில் பாலா உதவி செய்தாரோ, அவரை கூப்பிடு பூ போட்டு மக்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

 

அதற்கு நெட்டிசன்கள், “பார்த்து தம்பி, குடும்பம் முக்கியம், நீ செய்வது நல்லதே, ஆனால் இந்த அரசியல்வாதிகள் வளர விடமாடங்க, பார்த்து இருங்கள்”, என அனைத்து ஒரே மாதிரியான கமென்ட்டுகள், நல்லதுகே காலம் இல்லை என சொல்வார்கள் அது இது தான் போல.

 

author avatar
Kowsalya