கடற்கரையில் நின்று சூடேற்றிய ஷிவானி! வித்தியாசமான உடையில் விசித்திரமான புகைப்படம்!

0
91

ஷிவானி நாராயணன் முதல் முதலாக 2015ஆம் ஆண்டில் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின் 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியின் வாயிலாக அறிமுகமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி பகுதி 3 என்ற தொடரின் வாயிலாக அறிமுகமானார். இந்த தொடரில் ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல்நிலவு’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், ஜோடி அன்லிமிடெட் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

அத்துடன் 2020ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘இரட்டை ரோஜா’ என்ற தொடரின் ‘அபி’ என்னும் கதாபாத்திரத்தில் மீண்டும் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். எனினும் அவர் தொடரின் பாதியிலேயே வெளியேறிவிட்டார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 தமிழ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, தனது திறமைகளை மக்களுக்கு காட்டினார்.

பிக்பாஸில் இருந்து வெளியில் வந்ததும் இவர், அவருடைய சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வந்தார். தற்போது இன்ஸ்டாவில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவர் கடற்கரையில் நின்றது கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

https://www.instagram.com/p/CRIo2OML83G/?utm_source=ig_web_copy_link

author avatar
Jayachithra