கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா; என்ன காரணம் தெரியுமா?

0
133
#image_title

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா; என்ன காரணம் தெரியுமா?

நடிகர் சூர்யா முன்னதாக இயக்குனர் சுதா கொங்கரா படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

 

கார்த்திக் சுப்புராஜ் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இறுதியாக கூட லாரன்ஸை வைத்து இவர் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலும் குவித்தது. இதனால் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கும் சூர்யா 44 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் இந்த படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் நடிப்பதற்காக சூர்யாவும், படத்தை இயக்குவதற்காக கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவிலையாம். ஏனெனில் இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து தான் தயாரிக்க உள்ளதாம்.

 

இந்த சூழலில் இவர்கள் இருவரின் சம்பளத்திற்காக கடன் வாங்கினால் அதற்கு வட்டி கட்ட வேண்டும் என்பதால், சம்பளம் வாங்காமல் பணிபுரிய முடிவு செய்துள்ளார்களாம். மேலும், படம் வெளியாகி கிடைக்கும் லாபத்தை இருவரும் பிரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்களாம். அதுமட்டுமின்றி லாபத்தில் இருவருக்கும் அதிக ஷேர் கிடைத்தால் அதையே இவர்களின் அடுத்த படத்தில் சம்பளமாக நிர்ணயித்துக்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.