கிடு கிடுவென முடி வளர பூண்டு மட்டும் போதும்! இதோ குறிப்பு!

0
163

பூண்டு நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள், ஆனால் அதன் நன்மை என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை, பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வளரும்.

 

தினமும் தலை சீவும்போது கொத்து கொத்தாக முடி உதிரும் அதை பார்த்து நமக்கு நினைத்து அதிக மன வேதனை அடைவோம், முடி உதிர்வதைத் தடுக்கும் ஒரு பொருள் உங்கள் வீட்டு சமயலறையில் உள்ளதை நாம் தெரியாமல் இருக்கிறோம். அது தான் அது பூண்டு. நாம் சமையலில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப்பொருள் பூண்டு. மேலும் உணவின் சுவையை கூட்டவும் பயன்படுகிறது பூண்டு, மிக அதிக மருத்துவ பண்பு கொண்ட ஒரு உணவுப்பொருள். முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகின்றன. பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது.

 

பூண்டில், ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது . கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது . இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

 

முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து, அடைப்பைப் போக்கி முடி வளர உதவுகிறது. தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் பூண்டு சிறந்த ஒன்று.

 

தேவையான பொருட்கள்:

 

பூண்டு -4 பல்

தேங்காய் எண்ணெய்- 100 மில்லி

 

செய்முறை:

 

1. இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2 தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும்.

 

உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தடவவும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் நன்கு தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும். பூண்டு மற்றும் தேங்காய் எண்ணெய் கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய் எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. பயன்படுத்தி பயன் பெறவும்

author avatar
Kowsalya