நடிகர் சிம்புவுடன் இவர் சேரக்கூடாது – திட்டம் தீட்டிய நடிகர் தனுஷ்!!

0
181
#image_title

நடிகர் சிம்புவுடன் இவர் சேரக்கூடாது – திட்டம் தீட்டிய நடிகர் தனுஷ்!!

மீண்டும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி உறுதியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகர் தனுஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபில்ம்ஸ் நிறுவனத்தின் மூலம், ‛‛3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கா முட்டை, காக்கிச்சட்டை, மாரி” உள்ளிட்ட பல ஏராளமான வெற்றி படங்களை தந்துள்ளார். வொண்டர்பார் ஃபில்ம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட கடைசி படம் மாரி-2.

இவர் தயாரிப்பில் வெளிவந்த “வடசென்னை” படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இப்படத்தை இயக்கியவர் வெற்றி இயக்குனரான வெற்றிமாறன் அவர்கள்.

கடந்த ஐந்தாண்டுகளாக படங்களை ஏதும் தயாரிக்காமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நடிகர் தனுஷ் அவர்கள் மாபெரும் வெற்றி அடைந்த கர்ணன் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது தனது வொண்டர்பார் ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 15வது படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதாவது இயக்குநர் மாரி செல்வராஜ் உடன்
இணைகிறார் நடிகர் தனுஷ், அதுவும் தயாரிப்பாளராக.

இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் நடிகர் தனுஷ். இப்படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் வாழை என்னும் தலைப்பில் சிறுவர்களை வைத்து ஓ.டி.டி தளத்திற்காக படம் ஒன்றையும் இயக்கி வருகிறார். அது முடிந்த பிறகு நடிகர் விக்ரம் அவர்களின் மகன் துருவ் விக்ரம் அவர்களை வைத்து ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பெயரிடப் படாத, இந்த படம் எப்போது தொடங்கப்படும் என அறிவிப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பரியேறு பெருமாள், கர்ணன் ஆகிய இரு படங்களும் மாபெரும் வெற்றி அடைந்ததுடன் தமிழ் சினிமாவில் முக்கிய படங்களாக பார்க்கப்படுகிறது. பெரும் சமூகமாக மாற்றம் ஏற்படும் வண்ணமும் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.

மற்றொருபுறம் நடிகர் சிம்பு அவர்களை இயக்குனர் மாரி செல்வராஜை தொடர்பு கொண்டு கதை சொன்னதாகவும் இதனை அறிந்து கொண்டு நடிகர் தனுஷ், உடனே மாரி செல்வராஜை அணுகி தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்தார் என்றும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப் படுகிறது.

நடிகர் தனுஷ் அவர்கள் வழக்கமாக இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் இணைந்துள்ளது ஏன்? என்ற பெரும் கேள்வி எழுப்பியுள்ளது