மாணவியின் தாய் மாணவனுக்கு செய்த கொடூரம்!காரைக்காலில் பரபரப்பு!

0
143

மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் மாணவியின் தாய் மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்தது அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிராந்தியமான காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டில் வசித்து வரும் தம்பதியினர் தான் ராஜேந்திரன், மாலதி. இவர்களுடைய ஒரே மகன் பால மணிகண்டன்.

காரைக்காலில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் பால மணிகண்டன். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார்.

ஒரு பதினோரு மணி அளவில் ஒரு பெண்மணி வந்து அந்தப் பள்ளியின் வாட்ச்மேன் உடன் பேசியுள்ளார். வாட்ச்மேன் என்ன வேண்டும் என்று கேட்கவே எட்டாம் வகுப்பில் படிக்கும் பால மணிகண்டனை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதை அந்த வாட்ச்மேன் மறுக்கவே கையில் இருந்த, குளிர் பான பாட்டிலை வாட்ச்மேன் இடம் கொடுத்து இதை எட்டாம் வகுப்பில் படிக்கும் பால மணிகண்டனிடம் கொடுத்து விடுங்கள் என்று சென்றுள்ளார்.

வாட்ச்மேன் சென்று எட்டாம் வகுப்பில் படித்து வரும் பால மணிகண்டனிடம் அந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். சிற்றுண்டி இடைவேளையில் அந்த குளிர்பானத்தை பால மணிகண்டன் குடித்துள்ளார். நேற்று பள்ளி ஆண்டு விழா பள்ளியில் நடைபெற்று உள்ளது.

ஆண்டு விழா என்பதால் அனைவருக்கும் விடுப்பு அளிக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டிற்குச் சென்ற பால மணிகண்டன் வீட்டிற்குச் சென்று வாந்தி எடுத்துள்ளார். தொடர்ந்து வாந்தி எடுத்தவுடன் பதற்றம் அடைந்த பால மணிகண்டனின் பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பால மணிகண்டனை சேர்த்துள்ளனர். பால மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார்.

சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் வாட்ச்மேன்னை போலீசார் விசாரித்துள்ளனர். குளிர்பானத்தை யார் கொடுத்தது என்று விசாரித்து வந்தனர். அந்த நிலையில் பள்ளிக்கு சென்று இதை யார் கொடுத்தது என்று விசாரணை செய்துள்ளனர். அப்போது கேட்டில் இருந்த வாட்ச்மேன் ஒரு பெண்மணி வந்து கொடுத்தார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அதனை சி டி டிவி கேமரா மூலம் யார் கொடுத்தது? என்பதை உறுதி செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணை நடத்திய நிலையில், அதே பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியின் தாய் தான் குளிர்பானத்தை கொடுத்தது தெரியவந்தது. அவரை விசாரிக்கவே முன்புக்கு முரணாக பதில் கூறியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் நான் பிஸ்கட் தான் கொடுத்தேன், குளிர்பானம் எதுவும் கொடுக்கவில்லை, என்று கூறவே சிசிடிவி கேமராக்களை நாங்கள் ஏற்கனவே பார்த்து விட்டோம், என்று கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
Kowsalya