நமது வீட்டிலேயே நமக்கு ஏற்படும் சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகளுக்கான முழு நிவாரணத்தை இந்த பதிவை வழி காட்டப் போகின்றது
குளிர்காலங்களிலும் குளிர் காலங்கள் எல்லாவற்றிலும் இந்த சைனஸ் பிரச்சனை அனைவரையும் பாதிக்கிறது. இந்த குளிர் காலத்தில் அதிகமாக பனி பொலிவு ஏற்படுவதால் நமது நுரையீரலில் அதிகமாக சளி சேர்ந்து, வரட்டு இருமல் போன்றவை ஏற்படுகிறது.
இப்பொழுது அதை சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
அதை வீட்டிலேயே பத்து நிமிடத்தில் சரி செய்யக்கூடிய அற்புதமான வீட்டு வைத்தியம் ஒன்றை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1. வெற்றிலை இரண்டு
2. வெந்தயம் 10
3. சீரகம் சிறிதளவு
4. கல் உப்பு இரண்டு
5. கசகசா ஒரு சிட்டிகை
செய்முறை:
1. ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக கழுவி கொள்ளுங்கள். அதன் காம்பு பகுதியையும் நுனி பகுதியையும் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
2. இப்பொழுது வெற்றிலையின் நடுவே சிறிதளவு கசகசா, பத்து வெந்தயம், சிறிதளவு சீரகம் ஆகியவற்றை போட்டு நன்றாக மடித்துக் கொள்ளுங்கள்.
3. இந்த வெற்றிலையை காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு நன்றாக மென்று முதலில் வரும் உமிழ்நீரை துப்பி விடுங்கள். அதனை மெதுவாக நின்று விழுங்கவும். கடைசி வரும் சக்கயை துப்பி விடுங்கள்.
பாத எரிச்சலுக்கு அதே போன்று
ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக கழுவி கொள்ளுங்கள். அதன் காம்பு பகுதியையும் நுனி பகுதியையும் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
2. இப்பொழுது வெற்றிலையின் நடுவே உப்பு கல் 2, பத்து வெந்தயம், இரண்டையும் போட்டு நன்றாக மடித்துக் கொள்ளுங்கள்.
3. இந்த வெற்றிலையை காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு நன்றாக மென்று முதலில் வரும் உமிழ்நீரை துப்பி விடுங்கள். அதனை மெதுவாக நின்று விழுங்கவும். கடைசி வரும் சக்கயை துப்பி விடுங்கள்.
இதை சாப்பிட்ட பத்து நிமிடத்தில் . சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகளும் பரந்து போகும்

