இந்த உணவுகளை அதிகமாக உண்பவர்களா… அப்போ இரத்தக் குழாய் அடைப்பு உங்களுக்கு ஏற்படும்!!

0
64

இந்த உணவுகளை அதிகமாக உண்பவர்களா… அப்போ இரத்தக் குழாய் அடைப்பு உங்களுக்கு ஏற்படும்…

 

நாகரிகம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இருக்கும் நாம் ஒழுங்கற்ற உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். இதனால் நம் உடலில் நன்மைகள் கிடைப்பது குறைந்து தீமைகள் தான் அதிகரிக்கின்றது. இந்த சிறிய அளவு தீமைகள் நாளடைவில் பெரிய அளவாக உயிரிழப்பு கூட ஏற்படும் நிலைமையில்தான் நாம் உள்ளோம்.

 

இந்த காலத்தில் இதய நோயால் இறப்பவர்கள் தான் அதிகம். அதற்கு காரணம் இதயத்திற்கு இரத்தம் செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது தான். இவ்வாறு இரத்தக் குழாய் அடைப்பதற்கு சில உணவுகளும் காரணம். அந்த வகையில் இந்த பதிவில் இதயத்தில் ஏற்படும் இரத்தக் குழாய் அடைப்புக்கு காரணமான உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் உணவுகள் நாம் அன்றாடம் வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் தான். இந்த உணவுகளை இனிமேலாவது சாப்பிடாமல் தவிர்த்து விடுங்கள். தீமைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

 

இரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தும் உணவுகள்…

 

* பீட்சா

* பிரெஞ்சு பிரைஸ்

* கூல்ட்ரிங்ஸ்

* ஐஸ்கிரீம்

* ஃபிரைடு சிக்கன்

* இறைச்சி

 

பீட்சா:

 

இந்த பீட்சா உணவு இரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும் உணவுகளில் முக்கியமான ஒன்று. இந்த பீட்சா உணவில் இதயத்திற்கு ஆபத்தான கொழுப்புகளை ஏற்படுத்தும் காரணிகள் உள்ளது. இதனால் பீட்சா உணவை அடிக்கடி சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். முழுவதுமாக நிறுத்திவிட்டால் நம் உயிருக்கு நல்லது ஆகும்.

 

பிரெஞ்சு பிரைஸ்:

 

பிரெஞ்சு பிரைஸ் உணவில் எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய கார்போஹைட்ரேட் சத்துக்கள் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகின்றது. அது மட்டுமில்லாமல் இந்த பிரெஞ்ச் பிரைஸ் உணவில் உள்ள உப்பு மற்றும் கொழுப்பு இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால் இந்த பிரெஞ்ச் பிரைஸ் உணவை சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.

 

கூல்ட்ரிங்கஸ்:

 

தற்போதைய நாகரிக காலத்தில் இயற்கையான பானங்களை விட்டு கூல்ட்ரிங்க்ஸ் எனப்படும் குளிர் பானங்களை குடித்து வருகிறோம். இந்த கூல்ட்ரிங்க்ஸ் குடிப்பதால் நம் உடலில் பல தீமைகள் ஏற்படுகின்றது. தற்பொழுது வரும் அனைத்து கூல்ட்ரிங்க்ஸ் பானங்களிலும் சோடா கலந்துள்ளது. இந்த சோடா கலந்த குளிர்பானங்கள் நமது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. குளிர்பானங்கள் நமது உடலில் இன்சுலின் அளவை அதிகரித்து விடுகின்றது. மேலும் உடல் எடையை அதிகரிக்கவும் செய்கின்றது. கூல்ட்ரிங்க்ஸ் குடிப்பதற்கு பதிலாக பழச்சாறுகளை குடிக்கலாம்.

 

ஐஸ்கிரீம்:

 

கோடை காலமாக இருந்தாலும், குளிர் காலமாக இருந்தாலும், மழை காலமாக இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு பொருள் ஐஸ்கிரீம் ஆகும். இந்த ஐஸ்கிரீமை அதிகமாக சாப்பிடுவதால் உடலுக்கு எவ்வளவு தீமைகள் ஏற்படுகின்றது என்பது தெரிவதில்லை. ஐஸ்கிரீமில் அதிக அளவு கலோரிகளும், கெட்ட கொழுப்புகளும் உள்ளது. இது நமக்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். மேலும் இதயத்திற்கு தீங்கு ஏற்படும். மேலும் இதில் உள்ள கொழுப்புகளும் இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும். இதனால் இந்த ஐஸ்கிரீமை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

 

ஃபிரைடு சிக்கன்:

 

ஃபிரைடு சிக்கன் எனப்படும் எண்ணெயில் வறுத்தெடுக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவதால் நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றது. சாதாரணமாக எண்ணெயில் வறுத்தெடுக்கப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. இந்த கொலஸ்ட்ரால் நாளடைவில் நமது இதயத்திற்கு பல கோளாறுகளை ஏற்படுத்துகின்றது. இதனாலும் இதயத்தின் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்.

 

இறைச்சி:

 

இறைச்சி சாப்பிடுவது நமக்கு நன்மைகளை கொடுத்தாலும் அதிகமாக சாப்பிடும் பொழுது இது பல தீமைகளை நமது உடலுக்கு தருகின்றது. இதய நோய் உள்ளவர்கள், உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் அனைவரும் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.