1.5 கோடி நிதி பர்சனல் பி.ஏ குளு குளு கார்… திமுக எம்எல்ஏக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

0
258
#image_title

1.5 கோடி நிதி பர்சனல் பி.ஏ குளு குளு கார்… திமுக எம்எல்ஏக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

ஒருமாதமாக நடைபெற்று கொண்டிருக்கும், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர். நிறைவடைய போகும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சில கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த கோரிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு செயலாளர் நியமிக்க வேண்டும், எங்களுக்கென்று தனி பி.எ, அரசு சார்பில் சொகுசு கார் வழங்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் மார்ச் மாதம் தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர், நாளையுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் நேற்று நடந்த கூட்டத் தொடரில், இரவு 9மணிக்கு ஸ்டாலின் கலந்துக்கொண்டார், அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த மனுவை ஒவ்வொன்றாக படிக்க தொடங்கினார் அமைச்சர் துரைமுருகன்.

“ சட்டசபை இனி டெல்லியில் நடக்கவேண்டும். என பாமக எம்.எல்.எ அருள் அளித்த கோரிக்கையை. “வாய்ப்பில்லை ராஜா” என்று பதில் அளித்தார் அமைச்சர் துரைமுருகன்.

காங்கிரஸ் ஆட்சியில் சட்டசபை ஊட்டியில் தானே நடைபெற்றது. என்று கேள்வி எழுப்பினார் பாமக எம்.எல்.எ அருள். அதற்கு ஊட்டியை விட சட்டசபையிலேயே அதிக குளிர் இருக்கிறது. என்று பதில் அளித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டது போல பி.எ, சொகுசு கார், மற்றும் தொகுதிக்கு ஒரு செயலாளர் இதை விரைவில் செய்து முடிப்போம் என கூறினார்.

அதுமட்டுமின்றி எம்.எல்.எ-க்கள் விடுதியில், இன்டர்நெட் சேவையுடன் கூடிய wi-fi வசதி அமைத்துதரப்படும், அதற்காக 1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் கையெழுத்திற்காக காத்திருக்கிறோம், அவர் கையெழுத்திட்ட பின் அதையும் முடித்துவிடுவோம். என பேசினார் அமைச்சர் துரைமுருகன்.

author avatar
Jayachithra