10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை தாக்கிய 54 புயல்களில் 359 பேர் பலி

Photo of author

By CineDesk

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை தாக்கிய 54 புயல்களில் 359 பேர் பலி

CineDesk

Updated on:

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை தாக்கிய 54 புயல்களில் 359 பேர் பலி
கஜா புயல் தொடர்பான ஆய்வறிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்துள்ளது.

அதில் கடந்த 10 ஆண்டுகளில் புயல்கள், அதில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் தமிழ்நாட்டில் 2000-ம் ஆண்டுக்கு பிறகு 6 பெரிய புயல்கள் உருவாகின. 2005-ம் ஆண்டில் மட்டும் பியார், பாஸ், பானுஸ் என 3 புயல்கள் உருவாகி சேதத்தை உருவாக்கின.

அதன் பின்னர் 10 ஆண்டுகளில் வீசிய 5 புயல்கள் பெரும் உயிர் சேதத்தை உருவாக்கின. அதன்பின்னர் 10 ஆண்டுகளில் வீசிய 5 புயல்கள் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தின. 2008-ல் நிஷா புயல் உருவாகி 102 கிலோமீட்டர் வேகத்தில் காரைக்கால் பகுதியை தாக்கியது. இதில் 189 பேர் இழந்தனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டில் வீசிய தானே புயல் கடலூர், புதுச்சேரி பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயல் 38 உயிரை பறித்தது. 2016-ல் உருவான வர்தா புயலில் 22 பேரும் உயிர் இழந்தனர். கன்னியாகுமரியில் 2017 ஆம் ஏற்பட்ட ஒக்கி புயலில் 185 மீனவர்கள் காணாமல் போனார்கள்.

ஒக்கி புயலை தொடர்ந்து வீசிய கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது வரை 359 பேர் உயிர் இழந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.