கொம்மாளுக்கு 1000…பொண்ணுக்கும் ஆயிரம்… அமைச்சர் துரைமுருகனின் அடாவடி பேச்சு!!
நாளுக்கு நாள் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் பேச்சு முகம் சுளிக்கும் அளவிற்கு வளர்ந்து கொண்டே போகிறது. இவற்றையெல்லாம் எச்சரிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சை கவனித்து பேசுங்கள் என்று கூறி அறிவிப்பை வெளியிட்டார்.ஆனால் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த வகையில் அமைச்சர் பொன்முடி அரசு விழா ஒன்றில், பெண்களை ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கேலியாக பேசினார்.
அது பெரும் சர்ச்சையாக வெடித்தது.அதனை தொடர்ந்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று நடந்த விழாவில் உங்க கொம்மாளுக்கு ரூ.1000 பொண்ணுக்கு ஆயிரம். சீக்கிரம் கொடுத்து விடுகிறோம் கவலைப்படாதீங்கோ… இவ்வாறு மேடையில் பேசியுள்ளார். பெண்களை இவ்வாறு இழிவாக பேசியதால் அனைவரும் இவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் திமுகவினரின் பேச்சு மக்களிடையே பெரும் சகிப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது. திமுகவின் கட்டுப்படுத்த முடியாத இந்த பேச்சால் மக்களில் பலர் ஆளும் கட்சியை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.