10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரயில்வே துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாள்!

0
38
#image_title

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரயில்வே துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாள்!

மத்திய ரயில்வே வாரியம் தனது அதிகாரபூர்வ @rrccr.com இணைத்தளத்தில் ரயில்வே துறையில் காலியாக உள்ள 2409 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி எலக்ட்ரீஷியன்,ஃபிட்டர்,வெல்டர்,வயர்மேன்,பெயிண்டர் பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

காலியிடங்கள்: மொத்தம் 2,409

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது.இதையடுத்து தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி்.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில்(Trade) முறையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 15 முதல் 24க்குள் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://rrccr.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்ப கட்டணம்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 28-09-2023