சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
36
#image_title

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌, வழக்கு பணியாளர்கள்‌ மற்றும் பன்முக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: 04

தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌ பதவிக்கு ஒரு காலியிடம்,வழக்கு பணியாளர் பதவிக்கு இரன்டு மற்றும் பன்முக உதவியாளர் பதவிக்கு ஒரு காலியிடம் என மொத்தம் 04 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ, பட்டம், B.Sc,BE/ B.Tech படிப்பை முடித்திருக்க வேண்டும்.

IT Administrator: Diploma in Computers/ IT and Quality Management,Degree,B.Sc,BE/ B.Tech

Case Worker: Degree in Social Work

வயது வரம்பு: இப்பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌ பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000,வழக்கு பணியாளர்கள்‌ பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6,400 மற்றும்
பன்முக உதவியாளர் பதவிக்கு ரூ.6,400 மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: நேரடி அல்லது ஆன்லைன் வழி

இப்பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://chennai.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம்‌ செய்து அவற்றை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களுடன் இன்று ( 05.09.2023) மாலை 5.0௦ மணிக்குள்‌ கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது ஆன்லைன் முறையிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலகம்‌,மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌,8-வது தளம்‌,சிங்காரவேலர்‌ மாளிகை,இராஜாஜி சாலை,சென்னை-01

மின்னஞ்சல் முகவரி: [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்ற வேண்டுமென்று தெரிவிக்கப்ட்டுள்ளது.