தனது நிர்வாண படங்களை பதிவிட்ட 15 வயது சிறுமி! பெற்றோர் நெஞ்சு வலியால் பாதிப்பு!

0
155

இந்தா கொரோணா பேரிடர் தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர்கள் மொபைல் போன் கொடுத்த நிலையில் 15 வயது சிறுமி தொடர்ந்து தனது நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் என்ற இடத்தில் ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர்கள் சிறுமியின் கையில் போனை கொடுக்க அந்தப் பெண் தனது நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 15 வயது சிறுமியின் பெற்றோர்கள் தனது மகள் அவளது நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை பார்த்த உடன் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர் தனது நிர்வாண படங்களை பதிவிட்டது மட்டும் இல்லாமல் அவளது சொந்தக்கார தோழியிடம் இன்ஸ்டாகிராமில் தன்னை பாலோ செய்யும் படியும் கூறியுள்ளார்.

 

தகவலின் படி, சிறுமியின் குடும்பத்தினர் இந்த விஷயத்தில் உதவி கோர உதவி எண் 181 ஐ அழைத்து உள்ளனர். ஆன்லைன் படிப்புக்காக சிறுமிக்கென ஒரு தனி அறை மற்றும் ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் ஆலோசகர்களிடம் கூறியுள்ளனர். இருப்பினும், இளம்பெண் தனது நிர்வாண படங்களை எடுத்து மற்றும் இந்த படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளார். சிறுமியின் பெற்றோரின் கூற்றுப்படி, அந்த சிறுமி தனது உறவினர்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடரவும், அவர்களின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடவும் கேட்டு கொண்டுள்ளார், என கூறி உள்ளனர்.

 

மேலும், உறவினர்கள் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் இருவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இருந்த போதிலும், சிறுமி தனது பெற்றோர் மருத்துவமனையில் இருந்த போதும் தனது நிர்வாண படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார் என சொல்லபடுகிறது. பின்னர் ஆலோசகர்கள் அந்த பெண்ணுடன் பேசி உள்ளார். மேலும் நிர்வாண படங்களை ஆன்லைனில் வெளியிடுவது சைபர் குற்றமாகும் என்பதை அவர்கள் அவளுக்கு உணர்த்தி உள்ளார். அதை புரிந்து கொண்ட சிறுமி எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தப் படத்தையும் வெளியிடமாட்டேன் என்று அந்த சிறுமி உறுதியளித்து உள்ளார், மேலும் தனது கணக்கை நீக்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இப்பொழுது மைனர் சிறுமி தனது மொபைல் போனை படிப்புக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது . சிறுமியின் பெற்றோர் தற்போது குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kowsalya