2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் நீக்கம்! இதுதான் கடைசி நாள் ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு! 

0
250
#image_title

2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் நீக்கம்! இதுதான் கடைசி நாள் ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு! 

2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.

2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில்  2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து இனிமேல் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே 2023 செப்டம்பர் 30 தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதால், இனிமேல் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகம் செய்யக்கூடாது. இந்த நடைமுறையானது  உடனடியாக அமலுக்கு வர இருக்கிறது.

எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை இந்த மாதம் 23-ஆம் தேதி முதல் அருகில் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம். வரவு வைக்க விருப்பமில்லை எனில் வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றியும் கொள்ளலாம். இதே போல் ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரையிலும் வங்கிகளில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்றிக் கொள்ளவும் முடியும். 

இந்த சேவையை அருகில் உள்ள எந்த ஒரு வங்கிக் கிளையிலும் 2000  பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான கடைசி நாள் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ஆகும்.

இந்த நடவடிக்கையில் 2,000 ரூபாய் நோட்டுக்களானது  பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை.  அவை திரும்ப மட்டுமே பெறப்படுகின்றன. இதில் வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக நாம் வரவு வைக்கும் செயல் முறையை போன்றது. இதில் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது.

இந்த நடவடிக்கை கருப்புப் பணப் புழக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சந்தையில் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் வெகுவாக குறைந்தது.  கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6.73 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023, மார்ச் 31ஆம் தேதி 3.62 லட்சம் கோடியாக மூன்று லட்சம் கோடி வரை குறைந்துள்ளது.  இது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 10.80 சதவீதமாகும்.

2000 ரூபாய் நோட்டுகளில் பெரும்பகுதி கருப்பு பணமாக இருப்பதினால் அவை வங்கிக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை கொண்டு வரவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.