3 ஆண்டு காதல் 5  மாத கர்ப்பம் ஏமாற்றிய காதலன் ! துணிச்சலுடன் போராடி அதிரடி முடிவெடுத்த இளம்பெண்! 

0
92
3-year-love-5-month-pregnancy-cheated-boyfriend-a-young-girl-who-fought-bravely-and-took-action
3-year-love-5-month-pregnancy-cheated-boyfriend-a-young-girl-who-fought-bravely-and-took-action

3 ஆண்டு காதல் 5  மாத கர்ப்பம் ஏமாற்றிய காதலன் ! துணிச்சலுடன் போராடி அதிரடி முடிவெடுத்த இளம்பெண்! 

காதலித்து விட்டு கர்ப்பமாக்கிய பின் திருமணம் செய்ய மறுத்த காதலனை இளம்பெண் ஒருவர் போராடி கரம் பிடித்துள்ளார்.

விருதாச்சலம் அருகே உள்ள சாத்துக்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பாக்கியலட்சுமி வயது 23. இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் விருத்தாச்சலம் அருகே பரவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் இவரது மகன் வினோத். இவரும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

பாக்கியலட்சுமியும் சரவணனும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேலும் சரவணன் திருமணம் செய்து கொள்வதாக பல முறை ஆசை வார்த்தைகள் கூறி பாக்கியலட்சுமி உடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் பாக்கியலட்சுமி கர்ப்பமாகியுள்ளார்.

இந்த தகவலை அவர் வினோத்திடம் தெரிவித்து தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு வினோத் திருமணம் செய்ய மறுத்ததோடு மட்டுமில்லாமல் கருவை  கலைத்து விடுமாறும் மிரட்டி உள்ளார்.

ஆனால் 5 மாதக் கருவை கலைக்க மறுத்த பாக்கியலட்சுமி நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளார். இதையடுத்து பாக்கியலட்சுமி பெற்றோர் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வினோத் மீது புகார் தெரிவித்தனர்.

இதனால் வினோத்தையும் அவரது பெற்றோரையும் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் வினோத் பாக்கியலட்சுமி திருமணம் செய்து கொள்வதாக கூறி உறுதி அளித்தார். தொடர்ந்து இரு வீட்டார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எம்ஜிஆர் நகரில் உள்ள ஸ்ரீ வண்ண முத்து மாரியம்மன் கோவிலில் வினோத் பாக்கியலட்சுமி காலத்தில் தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார். அவர்களை இரு வீட்டார் உறவினர்கள் அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தனர்.

காதலித்து ஏமாற்றிய காதலனை இளம்பெண் போராடி கரம் பிடித்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.