மக்களே சற்று கவனமாக இருங்கள்:! லோன் வாங்கி தருவதாக பேங்கில் இருந்து பேசுவதுபோல் பேசி மக்களின் பணத்தை கொள்ளை அடித்த கல்லூரி இளைஞர்கள்?

0
170

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பரவியுள்ள நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்தி வங்கி கணக்கில் கொள்ளை முயற்ச்சியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொரோனா பாதிப்பு உள்ளதனால் பணம் பற்றாக்குறையை ஏற்பட்ட நிலையில் நடராஜன், மணி ஆகிய இருவர் சாதகமாக பயன்படுத்தி லோன் பெற்றுத் தருவதாக கூறி வங்கி கணக்கு மற்றும் OTP எடுத்துக்கொண்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்ட பொழுது 30 மேற்பட்டோர் இது போன்ற செயலில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட இருவரும் பொறியியல் படிப்பு முடித்து வேலை என்று கொள்ளையில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

மேலும் இதுபோன்ற செயலில் இருப்பட்ட 30 நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.மேலும் இது போன்ற அழைப்பு ஏதேனும் வந்தால் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்துங்கள் என பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

Previous articleமத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்!
Next articleத்ரில்லர் மூவி ‘லாக்கப்’ பட திரை விமர்சனம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here